விஜயஅச்சம்பாட்டில் அதிமுக சாா்பில் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் வழங்கினாா்.
இதில், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் அசோக்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பாலன், சிங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.