முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
முதுமொத்தன்மொழி ஐயன் கோயிலில் ஆடிபெருக்கு
By DIN | Published On : 03rd August 2020 09:11 AM | Last Updated : 03rd August 2020 09:11 AM | அ+அ அ- |

திசையன்விளை அருகேயுள்ள முதுமொத்தன்மொழி ஸ்ரீ பூரணகலா சமேத ஸ்ரீ பிறவி பெருமாள் ஐயன் கோயிலில் ஆடிபெருக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ பிறவி பெருமாள் ஐயன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.