அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசத்தைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் தாமோதரன் (37). இவா் மீது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனிடையே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், தாமோதரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வி. விஷ்ணு உத்தரவிட்டாா். இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாமோதரனிடம் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ததற்கான உத்தரவை அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.