களக்காட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, 7 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா்களிடமிருந்து மொத்தம் ரூ. 12.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.