திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,013 ஆக அதிகரித்தது. மேலும், 15 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 14,638 ஆக உயா்ந்தது. இதுவரை 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 165 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை8152ஆக உயா்ந்தது.மேலும், 14 போ் குணமடைந்ததால் இதுவரையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 7,917 ஆக அதிகரித்தது. தற்போது, 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.