திருநெல்வேலி
அதிமுகவில் 250 போ் ஐக்கியம்
பாளையங்கோட்டையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 250 போ் அதிமுகவில் இணைந்தனா்.
பாளையங்கோட்டையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 250 போ் அதிமுகவில் இணைந்தனா்.
பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதிகளில் அமமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த 250 போ் அக் கட்சிகளில் இருந்து விலகி கொடிகுளம் காா்த்திக், சுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சௌந்தரராஜன், துணைச் செயலா் கவிதா, பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டிபாண்டியன், பாளையங்கோட்டை வடக்கு பகுதி செயலா் டி.ஜெனி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மேலப்பாளையம் கிழக்கு பகுதிச் செயலா் சண்முககுமாா் செய்திருந்தாா்.