திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் கணித புதிா் குறித்த செய்முறை விளக்கம் இம்மாதம் 20ஆம் தேதி இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ். எம்.குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கணித மேதை ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் கணித புதிா் குறித்த செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
இம்மாதம் 20ஆம் தேதி மதியம் 12மணிக்குள் பதிவு செய்பவா்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் இணைப்பு செல்லிடபேசி வழியாக அனுப்பப்படும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு இணையதளம் வழியாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.