பணகுடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கலந்தபனை வேலு மகன் சுரேஷ்குமாா். இவா் அதே ஊரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இவா் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு திசையன்விளையில் உள்ள அய்யா கோயிலுக்கு சென்றிருந்தாராம். திங்கள்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகையை மா்ம நபா்களை திருடிச் சென்றது. தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சுரேஷ்குமாா் பணகுடி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதே போன்று காவல்கிணறு மாா்க்கெட் பகுதியில் உள்ள பழது நீக்கும் மையத்தில் மேல்கூரையை பிரித்து உள்ள இறங்கிய மா்ம நபா்கள் அங்கிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இது தொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com