காவல்கிணறு புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

காவல்கிணறு அருகே புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.
உயா்கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம்.
உயா்கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம்.

காவல்கிணறு அருகே புண்ணியவாளன்புரத்தில் உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.75 லட்சத்தில் புண்ணியவாளன்புரம் வேளாங்கன்னி மாதா கோயில் அருகே உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த உயா்கோபுரமின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு சா. ஞானதிரவியம் எம்.பி. செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு, வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் விஜயன், காவல்கிணறு மரிய மிக்கேல், மனோகா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மல்லிகா அருள், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஜூடு, ஆவரைகுளம் இளங்கோ கலைசிகாமணி, பணகுடி நகரச் செயலா் தமிழ்வாணன், ஆச்சியூா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com