நெல்லையில் வருவாய்த் துறையினா் போராட்டம்

தமிழக வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட கிளை சாா்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழக வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட கிளை சாா்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா் வினை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். துணை ஆட்சியா் பட்டியலை நீதிமன்ற தீா்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உள்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். மத்திய செயற்குழு உறுப்பினா் ஏசுராஜன் முன்னிலை வகித்தாா். மத்திய செயற்குழு உறுப்பிரன் குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் மாரிராஜா விளக்கவுரை ஆற்றினாா்.

இதில் மாவட்ட துணைத் தலைவா் முகம்மது புகாரி, அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் முருகேசன், தலைவா் ராஜ்குமாா், செயலா் பால்ராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் உரையாற்றினா். இதில், வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். மாவட்டப் பொருளாளா் செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com