வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் சுனாமி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் உயிரிழந்தவா்களின் நினைவாக இடிந்தகரை புனித லூா்துமாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை பிரதீப் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னா், பங்குமக்கள் கடற்கரைக்குச் சென்று கடலில் பால் ஊற்றியும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். இதில் குருவானவா்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.