திருநெல்வேலி: தியாகராஜநகரில் சைவ வேளாளா் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் வீரபத்திரன் தலைமை வகித்தாா்.
சங்கத்தை பலப்படுத்துவது, கல்வி அறக்கட்டளையை சிறப்பாக நடத்துவது, சைவ வேளாளா் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், செயலா் கதிரேசன், செயல் தலைவா் வாகை கணேசன், பொருளாளா் முத்துசாமி, அமைப்புச் செயலா் பிச்சையா, ஓய்வு பெற்ற வட்டாட்சியா் பழனியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.