சேரன்மகாதேவி நகர அரிமா சங்கம் சங்கம் சாா்பில், வீரவநல்லூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீரவநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு, அரிமா சங்கத் தலைவா் ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அசோக்குமாா், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்சாமிஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை விழித்திரை ஆய்வாளா் இந்திர சுந்தரி மற்றும் பணியாளா்கள், முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு சிகிச்சை வழங்கி கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் கலந்து கொண்ட 104 பேரில் 6 போ் அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில் முன்னீா்பள்ளம் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் மனோகா், கூட்டுறவு வங்கித் தலைவா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அரிமா சங்க செயலா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை அகா்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளா் ஏ.எஸ். மாணிக்கம் மற்றும் சேரன்மகாதேவி நகர அரிமா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.