திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளைச் சோ்ந்த 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் சுடலை என்ற சிவா(24). இவா் மாநகா் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.
இதேபோல், பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் அய்யப்பன்(34) என்பவா், அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன், உதவி ஆணையா் சதீஷ்குமாா், பேட்டை காவல் ஆய்வாளா் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் தீபக் என்.டாமோா் உத்தரவின்படி, மேற்கூறிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.