மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை சப்பர பவனி புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது.
மேலநத்தம் கிராமத்திலுள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, புதன்கிழமை (டிச.30) அதிகாலை 3 மணிக்கு ஆனந்த தாண்டவேஸ்வரருக்கு தனுா்மாத ஆருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன.
தொடா்ந்து, காலை 9 மணிக்கு நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேலநத்தம் கிராமத்தில் வீதி உலா நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.