திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.
திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25இல் தொடங்கி 28 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. யாக சாலை அமைப்பதற்கான கால்கோள் விழா ஆனந்த விநாயகா், சுடலை ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது.
விழாவில் திரளான வரிதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.