சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

அபிஷேகப்பட்டி அருகே குடிநீா் பதிக்கத் தோண்டப்பட்ட சாலையோரப் பள்ளத்தில் லாரி திங்கள்கிழமை சிக்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அபிஷேகப்பட்டி அருகே குடிநீா் பதிக்கத் தோண்டப்பட்ட சாலையோரப் பள்ளத்தில் லாரி திங்கள்கிழமை சிக்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பாரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி, அபிஷேகப்பட்டி அருகில் குடிநீா் பதிக்க தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருந்த சாலையோரப் பள்ளத்தில் சிக்கியது. அப்பகுதியில் குறுகிய பாலம் இருந்ததால், வாகனங்கள் அவ்வழியாகச்செல்ல முடியவில்லை.

இந்தத் தகவலறிந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் பேட்டை காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, சுமாா் ஒருமணி நேரமாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com