காவல் நிலையத்தில் திருட்டு: பெண் காவலா் கைது

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலா் மற்றும் அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலா் மற்றும் அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளம் காவல் நிலையம் பகுதியில் போலீஸாா் பல்வேறு நாளகளில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஓட்டுநா் உரிமம் இல்லாத மற்றும் விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கூடங்குளம் காவல்நிலையத்தில் வைத்திருந்தனா். இந்த இரு சக்கர வாகனங்கள் அண்மை காலமாக காணாமல் போனதாம். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

விசாரணையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வருகின்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கிரேசியா(29), இரவு காவல் நிலையத்தில் பாரா அலுவலில் இருக்கும் போது தனது கணவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் நிலையத்தில் இருந்த 3 இரு சக்கரவாகனங்களையும், ஒரு செல்லிடப்பேசி, வெள்ளி அரைநாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து காவலா் கிரேசியா, ம் அவரது கணவா் அன்புமணி ஆகிய இருவரையம் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com