மதுரை-திருச்சி-சென்னை வழித்தட பேருந்துகள்: ஜன.2 முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்

மதுரை-திருச்சி-சென்னை ஆகிய வழித்தடங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பெருமாள்புரம் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள

மதுரை-திருச்சி-சென்னை ஆகிய வழித்தடங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பெருமாள்புரம் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து ஜனவரி 2-ஆம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்” அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் நடைமேடை எண் 4-இல் இருந்து இயக்கப்பட்டு வரும் மதுரை, திருச்சி, சென்னை வழித்தடங்களில் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரையில் பெருமாள்புரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com