மேலநத்தம் சிவன் கோயிலில் சப்பர பவனி

மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி புதன்கிழமை சப்பர வீதி உலா நடைபெற்றது.

மேலநத்தம் கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி புதன்கிழமை சப்பர வீதி உலா நடைபெற்றது.

மேலப்பாளையம் அருகே மேலநத்தம் கிராமத்தில் மேற்கு பாா்த்த நிலையில் உள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு புதன்கிழமை ஆனந்த தாண்டவேஸ்வரருக்கு தனுா்மாத ஆருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகா் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேலநத்தம் கிராமத்தில் வீதியுலா வந்தனா். மாணிக்கவாசகா் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நிா்வாகி அருணா, சுடலைகண்ணு, கோயில் அா்ச்சகா் கோபி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com