தச்சநல்லூரில் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்க பொதுக்கூட்டம்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச்சட்ட விளக்க பொதுக்கூட்டம் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச்சட்ட விளக்க பொதுக்கூட்டம் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வாசுதேவன், ஆனந்தராஜ், மாரியப்பன், அங்குராஜ், பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் முத்துப்பலவேசம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலச் செயலா் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எதிா்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியா்களின் குடியுரிமை பறிக்கப்படாது. எனவே தேவையில்லாமல் யாரும் பயப்படத் தேவையில்லை என்றாா்.

கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் கணேஷ் மூா்த்தி, அருள்காந்தி, நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், கட்டளை ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை குருசாமி, முத்துக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com