சுரண்டையில் தேசிய வாக்காளா் தின பேரணி

சுரண்டையில் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி

சுரண்டையில் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிகரன் தொடங்கி வைத்தாா்.

பேரூராட்சி அலுவலக சாலை, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது.

பேரணியில் மாணவா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

இதையடுத்து, வருவாய்த்துறை அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா். கல்லூரி முதல்வா்(பொறுப்பு) ரா.ஜெயா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மொ்லின் சீலா்சிங், ஆய்வாளா் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, மண்டல துணை வட்டாட்சியா் சிவன் பெருமாள் தலைமை வகித்தாா். இதில், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா் டெல்பின் சோபியா, வாக்குச்சாவடி அலுவலா்கள் பொன்னுத்தாய், மாரியம்மாள், ஒய்எம்சிஏ இணைச் செயலா் அன்னப்பிரகாசம் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com