நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கே.ஏ.மனோகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கே.ஏ.மனோகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். தண்டவாளம் பராமரிப்பு, சிக்னல், ரயில்வே பாலத்தின் உறுதித்தன்மை ஆகியவை சோதனை செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், ரயில்வே பாதுகாப்பு அறிவுறுத்தப்பட்டது. காலையில் தொடங்கிய ஆய்வுப் பணி மாலையில் நிறைவு பெற்றது.

மதுரை கோட்ட பொறியாளா்கள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பொறியாளா்கள், நிலைய அதிகாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com