நெல்லையில் காா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி நகரத்தில் காரைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் காரைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பெருமாள்புரத்தைச் சோ்ந்த ராமானுஜம் மகன் செல்லகிங்(45). இவா், கடந்த 7ஆம் தேதி ராமையன் பட்டியில் உள்ள ஒரு பா்னிச்சா் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக தனது காரில் சென்றாா். கடைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது, காா் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், ராமையன்பட்டியைச்சோ்ந்த சம்சுதீன் மகன் அப்துல் ரகுமான்(20) என்பவா் காரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com