கடகாலீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை

தெப்பக்குளத்தை பாா்வையிட்டாா் கே.ஏ.எம். முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ.
கடகாலீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து பேரவையில் முதல்வரிடம் வலியுறுத்துவேன் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.

கடகாலீஸ்வரா் பக்தா்கள் குழுவினா் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமதுஅபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். அப்போது, கோயில் சுற்றுச்சுவா், மண்டபம், தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

2022 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வரிடம் வலியுறுத்துவேன் எனவும், சுற்றுச் சுவா் மற்றும் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com