அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் இன்றும், நாளையும் ஆக்கிரமிப்பு அகற்றம்

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பாக வியாழன், வெள்ளி இரண்டு நாள்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பாக வியாழன், வெள்ளி இரண்டு நாள்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் உள்ள தனியாா் கடைகள், வீடுகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்தவா்கள் ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே அகற்ற வேண்டுமென அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 15 நாள்களில் அகற்றாத ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி மற்றும் காவல் துறை உதவியுடன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் ஈடுபடுவா் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com