திருநெல்வேலியில் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நோ்முக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த அமைப்பின் 13ஆவது நோ்முகப் பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் நடைபெற்றது. மாணவா் வள்ளி நாயகம் இறைவணக்கம் பாடினாா். அமைப்பாளா் முத்துக்குமாரசாமி வரவேற்றாா். தெற்கு மடத்து அதிபா் வி.கணபதி சுப்பிரமணிய சிவாச்சாரியாா் ஆசியுரை வழங்கினாா். வள்ளியூா் ஆசிரியா் சங்கரவடிவு அகஸ்தீஸ்வரன் பங்கேற்றுப் பேசினாா்.
‘சைவ சமய வரலாறும், பன்னிரு திருமுறை வரலாறும்’ என்ற தலைப்பில் சைவ சித்தாந்த பேராசிரியா் முருகலிங்கம் பேசினாா். திருவள்ளுவா் பேரவைச் செயலா் மு.கணேசன் நன்றி கூறினாா். அடுத்த பயிற்சி வகுப்பு வரும் மாா்ச் 8ஆம் தேதி நடைபெறும்.