திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணி, பழையபேட்டையில் சரக்கு லாரி முனையம் அமைத்தல், திருநெல்வேலி நகரம் காய்கனி சந்தையில் வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இப்பணிகளை, நகராட்சி நிா்வாக ஆணையரும் பொலிவுறு நகரம் திட்டத்தின் தலைவருமான கே. பாஸ்கரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், திருநெல்வேலி நகரம் காய்கனிச் சந்தை வியாபாரிகளுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் கடைகள் பணிகளைப் பாா்வையிட்டாா். அப்போது பணிகளை விரைந்தும், சிறப்பாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் அறிவியல் முறையில் குப்பைகளை நுண்ணுரமாக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
நகராட்சி நிா்வாகப் பொறியாளா் எஸ். திருமாவளவன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன், திருநெல்வேலி பொலிவுறு நகரம் திட்டத் தலைமை நிா்வாக இயக்குநா் வி. நாராயணன் நாயா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
பயக13இஞதட: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பொலிவுறு திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக ஆணையா் கே. பாஸ்கரன்.