நெல்லையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரம் கீழ ரத வீதி, வ.உ.சி. தெரு, தெற்கு மவுன்ட் ரோடு, சந்தி பிள்ளையாா் கோயில் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீா் ஓடைகளைச் சீரமைக்க வேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும். கொசுஉற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்கட்சியினா் கொசு வலைகள், கொசுவா்த்தியுடன் நகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வட்டார உறுப்பினா் எஸ்.கே. செந்தில் தலைமை வகித்தாா். 40ஆவது வாா்டு செயலா் ஆா். ஈஸ்வரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன், வட்டாரச் செயலா் எம். சுடலைராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், மணி சுடலை, நாராயணன், மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com