மேலப்பாளையத்தில் சனிக்கிழமை (பிப். 15) மின்விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை (பிப். 15) நடைபெறவுள்ளதால், மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தைப் பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகா், வீரமாணிக்கபுரம், நேதாஜிசாலை, ஹாமீம்புரம், மேலகருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைகுளம், அன்னைநகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என். கல்லூரிப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.