களக்காடு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா், மாணவிகள் 344 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் கலந்துகொண்டு, மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினாா்.
மேலும், களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளி, கோமதி அருள்நெறி மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற விழாவிலும் அவா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினாா். விழாவில், அதிமுக ஒன்றிய இளைஞரணிச் செயலா் த. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஜெயராமன், ஜெயலலிதா பேரவைச் செயலா் எம்.ஆா். பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.