கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி பகுதிகளில் மின் தடை

கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (பிப்.15) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (பிப்.15) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளியூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம், ராமன்குடி, நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம், மன்னாா்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com