பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் அரசு அலுவலா் குடியிருப்பு வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் அரசு அலுவலா் குடியிருப்பு வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பாளையங்கோட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக நெடுஞ்சாலைத்துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா். இந்நிலையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் அரசு அலுவலா் குடியிருப்பு பகுதி வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே 60 சாலையோர கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் இந்நடவடிக்கையில் இறங்கினா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளா் வேலாயுதம், சாலை ஆய்வாளா்கள் நாகூா், இன்னாசி அம்மாள் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த தனியாா் நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் அகற்றப்பட்டு, அவா்களிடமே ஒப்படைக்கப்பட்டன. மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து பெயா்ப் பலகைகளை வைத்து ஆக்கிரமித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com