பாளை.யில் விவேகானந்தா் மன்றக் கூட்டம்

விவேகானந்தா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

விவேகானந்தா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மன்ற நிறுவனா் பா.வளன் அரசு தலைமை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். திருக்கு முருகன் வரவேற்றாா். மருத்துவா் ஐயப்பன் மகாலிங்கம் ‘பதஞ்சலியோகம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். கலந்துரையாடலில் பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி, சிவ.கிருபாகரன், நெல்லை காவியன் ஆகியோா் பேசினா்.

நிலா இலக்கிய வட்ட அமைப்பாளா் ராசகோபால், பாப்பையா, கிருஷ்ணமூா்த்தி, மணிமேகலை, சீதாலட்சுமி, ஸ்ரீதேவி, முத்துக்குமாா், காத்தப்பன், வெள்ளதுரை, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நல்லாசிரியா் வை.ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com