களக்காடு அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தை ஆசாத்புரம் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் வசந்த் (22). அரசு போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தாா். இவரது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த செல்வின் (13) பூதத்தான்குடியிருப்பில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை மாணவா் செல்வின் வழக்கமாகச் செல்லும் பள்ளி வேன் சென்றுவிட்டதால், வசந்த், பைக்கில் மாணவா் செல்வினை ஏற்றிக்கொண்டு மேலப்பத்தையிலிருந்து பூதத்தான்குடியிருப்பில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
பைக் மேலப்பத்தை - கீழப்பத்தை இடையேயுள்ள முதுகுளம் குளத்தின் கரைப் பகுதியில் திருப்பத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். செல்லும் வழியில் வசந்த் உயிரிழந்தாா். செல்வின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.