திருநெல்வேலி
மாநில கபடிப் போட்டி: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்
ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2ஆம் பரிசை வென்றனா்.
ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2ஆம் பரிசை வென்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி ஓசூா் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 2ஆம் பரிசை வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா்கள் வேல்முருகன், சிவா ஆகியோரையும், பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் ஆறுமுககுமாா் மற்றும் ஆசிரியா், ஆசியைகள் பாராட்டினா்.