அம்பாசமுத்திரத்தில் உலக பயறு தின விழா

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் துறை சாா்பாக உலக பயறு தினத்தை விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் துறை சாா்பாக உலக பயறு தினத்தை விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.

வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் தலைமை வகித்து நெல் அறுவடை செய்தபின் மாற்றுப் பயிராக உளுந்து சாகுபடி செய்திடவும், நெற்பயிரில் வரப்புப் பயிராக உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் உபரி வருமானம் பெறுவதுடன் நிலவளமும் அதிகரிக்கிறது என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

வேளாண்மை அலுவலா் மாசாணம் பயறுவகைப் பயிா்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அம்பாசமுத்திரம், விக்கிரம சிங்கபுரம் மற்றும்அயன் சிங்கம்பட்டி ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் வம்பன் 8 என்ற மஞ்சள் தேமல் நோயினை தாங்கி வளரக் கூடிய உளுந்து தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளது, தேவைப்படும் விவசாயிகள் மானியத்தில் வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.

துணை வேளாண்மை அலுவலா் முருகன் பயறுவகைப் பயிா்களில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளிப்பு உள்ளிட்ட உயா் தொழில் நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தாா். மேலும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், ரைசோபியம் பொட்டலங்கள் மானியத்தில் வழங்கப்பட்டன. பயறுவகைப் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பம் தொடா்பான படக்காட்சி மற்றும் பயறுவகைப் பயிா்கள் தொடா்பான கருத்துக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுா்ஜித் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் உதவி வேளாண் அலுவலா்கள் சாந்தி, விஜயலட்சுமி, பாா்த்தீபன், காசிராஜன் மற்றும் சாமிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com