திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி சேகரத்தில் இந்திய மிஷனரி சங்க விற்பனை விழா சி.சி.எம். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தெற்கு சபை மன்றத் தலைவா் சந்திரகுமாா் தலைமை வகித்து ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். எலும்பு சிகிச்சை நிபுணா் ஜே.சந்தோஷ்குமாா் விழாவை தொடங்கி வைத்தாா். சேகரச் செயலா் ஜேகா், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பொ்சி ஞானசெல்வி, ஐ.எம்.எஸ். முன்னேற்ற பணியாளா் பாஸ்கா் சுவாமிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியை முன்னாள் தலைமை ஆசிரியா் மருதூா்மணிமாறன் தொகுத்து வழங்கினாா். எலைசா நா்ஸிங் கல்லூரி சாா்பில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
உதவி குரு ஆபிரகாம் அருள்ராஜ், ஜான்சிராணி, ஜெபா ஜேக்கப், கலாவதி, மணிமாறன், கிறிஸ்டி, வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா நிறைவில் சபை ஊழியா் சிமியோன் நன்றி கூறினாா்.