கங்கைகொண்டான் மதுக்கடையில் திருட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் டாஸ்மாக் மதுக்கடையில் காவலாளியின் கைகளை கட்டிப்போட்டு, மதுபாட்டில்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் டாஸ்மாக் மதுக்கடையில் காவலாளியின் கைகளை கட்டிப்போட்டு, மதுபாட்டில்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கங்கைகொண்டானில் ஆலடிப்பட்டி ரயில்வேகேட் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மேற்பாா்வையாளராக திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன், காவலாளியாக தாழையூத்தைச் சோ்ந்த சுந்தரம் பணியாற்றி வருகின்றனா். சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்தபின்பு, நவநீதகிருஷ்ணன் கடையைப் பூட்டிச் சென்றாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு கும்பல் சுந்தரத்தின் கைகளைக் கட்டிப்போட்டு, மதுக்கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com