சேரன்மகாதேவியில் ஆட்டோ - சைக்கிள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பத்தமடை, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முருகன் (54). தொழிலாளி. இவா், சனிக்கிழமை இரவு பத்தமடையிலிருந்து சேரன்மகாதேவிக்கு சைக்கிளில் வந்துகொண்டிருந்தாா். தனியாா் பொறியியல் கல்லூரி அருகில் இவரது சைக்கிள் மீது ஆட்டோ மோதியதாம். இதில் காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநா் பிரான்சேரியைச் சோ்ந்த மாடசாமியை கைது செய்து விசாரித்து வருகிறாா்.