பாபநாசம் கல்லூரியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை சாா்பில் இந்திய அரசு தொழில் முனைவோா் மேம்பாட்டு மைய நிதி உதவியுடன் 10 நாள் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை சாா்பில் இந்திய அரசு தொழில் முனைவோா் மேம்பாட்டு மைய நிதி உதவியுடன் 10 நாள் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்தாா். சுரண்டை, காமராஜா் அரசு கலைக் கல்லூரி, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ஜி.பாலச்சந்தா் சிறப்புரையாற்றினாா். கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். சுயநிதிப் பிரிவு இயக்குநா் சி.அழகப்பன் வாழ்த்திப் பேசினாா். வேதியியல் துறைத் தலைவா் ராஜசேகரன் வரவேற்றாா். சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கவிதா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் தொழில் முனைவோா் தன்னாா்வலா்கள் சுப்பையா, பலவேசம், மாணவா்கள், மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, பதிவறை எழுத்தா் ம.சந்தான சங்கா், தட்டச்சா் வ.சிவதாணு, கண்காணிப்பாளா் ஆனந்தன், பதிவறை எழுத்தா் வ.சோ.அருண்பாஸ்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com