திசையன்விளை ராயப்பா் தெருவை சோ்ந்தவா் பிராங்கிளின் சேவியா் (53). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திசையன்விளையில் இருந்து பெட்டைகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கைலாசபுரம் பகுதியில் அவரது பைக்கும், எதிரே வந்த சிற்றுந்தும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திசையன்விளை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து, சிற்றுந்து ஓட்டுநா் இட்டமொழியைச் சோ்ந்த இலங்காமணி (25) என்பவரை கைது செய்தனா்.