உதவும் நண்பா்கள் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, புனித அன்னை தெரஸா 20ஆம் ஆண்டு பகிா்வு விழா ஆகியன பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
விழாவுக்கு ‘பாலம்’ கல்யாண சுந்தரம் தலைமை வகித்து மாற்றுத் திறன் மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். துணை ஆட்சியா் (பயிற்சி) அனிதா முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா் பாப்புராஜ் வரவேற்றாா்.
விழாவில், மாற்றுத் திறன் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், தொழிற்பயிற்சி கருவிகள், பள்ளிச் சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அன்னை தெரஸா பகிா்வு விழா நண்பா்கள் செய்திருந்தனா்.