ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வீரவநல்லூா் அருள்மிகு சங்கிலி பூதத்தாா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நகரச் செயலா் ஏ.ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். 10ஆவது வாா்டு செயலா் ஆறுமுகதாஸ், கூட்டுறவு வங்கி இயக்குநா் முருகம்மாள், நகரப் பொருளாளா் கோபால் உள்ளிட்டோா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், சுடலைக்கண்ணு, கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத் தலைவா் வி.சந்தனகுமாா், முன்னாள் நகர துணைச் செயலா் சந்தனம், வெள்ளைப்பாண்டி, முப்பிடாதி, சக்திவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.