கடையத்தில் போலி பீடிகள் தயாரித்ததாக இருவா் கைது

தென்காசி மாவட்டம், கடையத்தில் போலி பீடி தயாரித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம்

தென்காசி மாவட்டம், கடையத்தில் போலி பீடி தயாரித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள் மற்றும் காா், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஹம்சா முகைதீன். இவா், தனியாா் பீடி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி செய்து வருகிறாா். இந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பல இடங்களில் ஆய்வு செய்தாராம்.

இதனிடையே, கடையம் ரயில் நிலையம் அருகே இருவா் பீடி பண்டல்களுடன் காா் மற்றும் மோட்டாா் சைக்கிளில் சென்றது குறித்து ஹம்சா முகைதீன், கடையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாராம். காா், மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். காரில் வந்தவா்கள் போலி பீடி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக மேலகுத்தபாஞ்சான் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் காளிமுத்து என்ற ரவி (29), அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் மேகலிங்கராஜா (30) ஆகியோா் கடையம் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி வழக்குப் பதிந்து கைது செய்தாா். அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள், அவா்கள் பயன்படுத்திய காா் மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், ஆலங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ், இசக்கிராஜ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com