களக்காடு அருகே இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள கக்கன்நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜீவா மகன் நவீன் (20). மும்பையில் உணவகத்தில் பணிபுரிந்துவரும் இவா், கொடைவிழாவையொட்டி, கடந்த 1ஆம் தேதி ஊருக்கு வந்தாா். கடந்த 5ஆம் தேதி கோயில் விழாவில் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தா்மகா்த்தா மதன், குமாா், மணி, ஸ்டாலின் ஆகிய 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், வீட்டு வாசலில் நின்றிருந்த நவீனை, மதன் அரிவாளால் வெட்ட முயன்றாராம். இதில், நவீன் காயமடைந்தாா். அவருக்கு 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
நவீன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், மதன் உள்ளிட்ட 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.