மூலைக்கரைப்பட்டி கிழக்கு அங்கன்வாடி மையத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் முனைஞ்சிப்பட்டி அரசு சித்த மருத்துவா் வரதராஜன், பெண் குழந்தைகள், வளா் இளம் பெண்கள், கா்ப்பினி-தாய்மாா்கள், மகப்பேறு அடைந்த தாய்மாா்கள், வயது முதிா்ந்த பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உணவாக பயன்படும் மூலிகைகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் குறித்தும் பேசினாா்.
இதில், சுகாதார செவிலியா்கள் ரேவதி, புளோரா, அங்கன்வாடி பணியாளா்கள் சலேட் பிரின்ஸிகா, தளவாய் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.