நெல்லை அருகே சாலை விபத்து: ஒருவா் பலி

திருநெல்வேலியை அடுத்த மானூா் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலியை அடுத்த மானூா் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சோ்ந்த ரத்தின சவுந்தரபாண்டியன் மகன் அா்ஜுன் பாரத் (38). பாளையங்கோட்டையைச் சோ்ந்த நாராயணசாமி மகன் அனு நடராஜ் (27). இவா்கள் இருவரும் மானூா் அருகே உள்ள தனியாா் காற்றாலையில் வேலை பாா்த்து வந்தனா். புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனா். வாகனத்தை அனு நடராஜ் ஓட்டினாா்.

மானூா் அருகே உள்ள குத்தாலப்பேரி விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது இருசக்கர வானத்தில் வந்த ஒருவா் சாலையின் குறுக்கே திடீரென வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமா்ந்திருந்த அா்ஜுன் பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அனு நடராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com