மதிதா இந்துக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் புதன்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் புதன்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரியும், வணிகவியல் துறை தலைவருமான பேராசிரியா் வ.ச.சங்கா் வரவேற்றாா். முகாமில், டிவிஎஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுந்தரமூா்த்தி தலைமையிலான குழுவினா் நோ்காணல் நடத்தினா். ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி,

ஐடிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி வங்கிகளுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமில் 520 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். இதில், 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாம், ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வா் பெ.சேகா், பேராசிரியா் மு.இளங்கோ, ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாலசுப்பிரமணியன், உதவிப் பேராசிரியா்கள் கா.சுப்பிரமணியன், ரா.பொன்மணி சுபா செல்லம், து.சிலம்பரசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com