மாடு மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாளையங்கோட்டையில் மாடு மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையில் மாடு மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரைச் சோ்ந்த ஜான்பால் மகன் செல்வின் பால்(39). இவா், சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அப்போது, எதிா்பாராத விதமாக சாலையில் நின்ற மாட்டின் மீது செல்வின் பால் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com